Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜூன் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருமழிசை மார்க்கெட் செயல்படாது

ஜூன் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருமழிசை மார்க்கெட் செயல்படாது

By: Monisha Tue, 16 June 2020 11:08:32 AM

ஜூன் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருமழிசை மார்க்கெட் செயல்படாது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலியானோர் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 25,344 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 33 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

corona virus,tamil nadu,chennai,market,full curfew ,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,சென்னை,மார்க்கெட்,முழு ஊரடங்கு

முழு ஊரடங்கிலும் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம்போல் இயங்கும். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கான மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் மதியம் 2 மணி வரை மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகிற 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருமழிசை மார்க்கெட் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதால் திருமழிசை மார்க்கெட் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|