ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதரானார் திருமூர்த்தி
By: Nagaraj Sat, 23 May 2020 1:41:57 PM
ஐ.நா., சபையில், இந்தியாவின் புதிய துாதராக நியமிக்கப்பட்டிருக்கும், டி.எஸ்.திருமூர்த்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் புதிய நிரந்தர துாதராக, டி.எஸ்.திருமூர்த்தி கடந்த 9ம் தேதி பொறுப்பேற்றார். இதையடுத்து ஐ.நா., சபை செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளதாவது:
புதிதாக பொறுப்பேற்றுள்ள, இந்தியாவின் நிரந்தர துாதர், டி.எஸ்.திருமூர்த்தியை, மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். எதிர்காலத்தில், அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு, ஐ.நா., சபை தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் விரும்புகிறார். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ''ஐ.நா.,வின், இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்று பதிவிட்டுள்ளார்.