Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 46 நாட்களுக்கு பின்னர் காரைக்காலில் ஒருவருக்கு கொரோனா

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 46 நாட்களுக்கு பின்னர் காரைக்காலில் ஒருவருக்கு கொரோனா

By: Nagaraj Sun, 10 May 2020 3:05:08 PM

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 46 நாட்களுக்கு பின்னர் காரைக்காலில் ஒருவருக்கு கொரோனா

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 46 நாட்களுக்கு பின்னர் காரைக்காலில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் வசித்த திருநள்ளாறு பகுதியில் சில இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மார்ச் 25-ஆம் தேதி ஊரடங்கை அறிவித்தது முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இதனால் மத்திய அரசு காரைக்கால் மாவட்டத்தை பச்சை மண்டலமாக அறிவித்தது.

வரும் 17-ஆம் தேதி ஊரடங்கு முடியவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா செய்தியாளர்களிடம் கூறியது:

karaikal,46 days,car driver,corona damage,guidelines ,காரைக்கால், 46 நாட்கள், கார் டிரைவர், கொரோனா பாதிப்பு, வழிகாட்டுதல்கள்

திருநள்ளாறு அருகே சுரக்குடி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கார் ஓட்டுநர் ஒருவர், வழக்கு ஒன்றில் திருநள்ளாறு காவல்நிலையத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்க தயார்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று தொடர்பான மருத்துவப் பரிசோதனை செய்தபோது வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர் காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், மேலும் அவர் தொடர்பில் இருந்த 8 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஓட்டுநரை கைது செய்த திருநள்ளாறு காவர்களுக்கும் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான பரிசோதனை அறிக்கை வரவேண்டியுள்ளது.

karaikal,46 days,car driver,corona damage,guidelines ,காரைக்கால், 46 நாட்கள், கார் டிரைவர், கொரோனா பாதிப்பு, வழிகாட்டுதல்கள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வீட்டைச் சுற்றி 500 மீட்டர் முதல் 1 கி.மீட்டர் வரை சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிப்போர் அத்தியாவசியத் தேவைக்காக வெளியே வருவதற்கு, ஏற்கெனவே கூறப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் நபராவார். காரைக்கால் மாவட்ட மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் தொற்று பரவாமல் தடுப்பதற்கு கூறப்பட்டுவரும் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.

Tags :