Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இந்த தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இந்த தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

By: vaithegi Wed, 09 Aug 2023 11:58:40 AM

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இந்த தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: சுதந்திர தினம் மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு வருகிற ஆக.15 மற்றும் 16 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ... தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை அன்று இறந்த முன்னோர்களின் நினைவாக குழித்துறை ஆற்றில் சில பரிகாரங்களை செய்வது வழக்கமாக இருந்து கொண்டு வருகிறது.

இவ்வாறு, ஆடி அமாவாசையை தொடர்ந்து பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் வாவுபலி பொருட்காட்சியும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 16 -ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் வாவுபலி கொண்டாட்டம் நடைபெற இருக்கும் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

school,college,vacation,kanyakumari ,பள்ளி, கல்லூரி,விடுமுறை,கன்னியாகுமரி

மேலும், வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக செப்டம்பர் 9ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுயிருக்கிறது.

Tags :
|