Advertisement

சிவகங்கை மாவட்டத்திற்கு இந்த தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Thu, 19 Oct 2023 10:06:52 AM

சிவகங்கை மாவட்டத்திற்கு இந்த தேதி உள்ளூர் விடுமுறை


சிவகங்கை : மருது சகோதரர்களின் 222வது நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் அக்.27-ம் தேதி உள்ளூர் விடுமுறை ...மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.

மேலும் பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.

local holiday,sivagangai , உள்ளூர் விடுமுறை ,சிவகங்கை


இதையடுத்து இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்து உள்ளது.

இந்த நிலையில் மருதுபாண்டியர் நினைவு நாளையொட்டி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிக்கு வருகிற அக்.27ல் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Tags :