சம்பா மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்யஇந்த தேதி இறுதி நாள்
By: vaithegi Sun, 08 Oct 2023 2:05:31 PM
சென்னை: சம்பா பயிர் காப்பீடு செய்ய வருகிற நவம்பர் 15 கடைசி நாள் ... தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2023 – 24 ஆம் ஆண்டு சம்பா மற்றும் ராபி பருவம் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கலெக்டர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எனவே அதன் படி, மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் ஆப் இந்தியா என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
விவசாயிகள் காப்பீடு செய்ய ஒரு ஏக்கர் சம்பா மற்றும் நவரை நெற் பயிருக்கு 492.75 ரூபாய், வேர்க்கடலைக்கு 432. உளுந்துக்கு 270.75. எள்ளுக்கு 157.5. வாழைக்கு 2.055. கரும்புக்கு 2,750. மரவள்ளிக்கு 1517.25. மிளகாய்க்கு 1,102.
மேலும் கத்தரிக்கு 817.50 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீடு தொகை செலுத்து பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.