Advertisement

இந்த மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

By: vaithegi Sat, 18 Feb 2023 5:43:08 PM

இந்த மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை: ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மின்சார ரெயில் சேவையில் மாற்றம் ... திருவள்ளூர் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி *சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. *எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவள்ளூர் இடையே அதிகாலை 4.30 மணிக்கும், அதிகாலை 5.40 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. *திருவள்ளூர்-எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே அதிகாலை 3.50 மணிக்கும், அதிகாலை 4.45 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. *திருவள்ளூர்-கடற்கரை இடையே இரவு 8.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதையடுத்து ஆவடி ரெயில்கள்: *எம்.ஜி.ஆர். சென்டிரல்-ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.*பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. *ஆவடி-எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே அதிகாலை 3.50 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. *ஆவடி-கடற்கரை இடையே அதிகாலை 4.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. *கடற்கரை-அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

train,cancelled ,ரெயில் ,ரத்து

அதைத்தொடர்ந்து பட்டாபிராம் : *எம்.ஜி.ஆர். சென்டிரல்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. *பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. *கடற்கரை-ஆவடி இடையே காலை 8.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.*ஆவடி-கடற்கரை இடையே அதிகாலை 4.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. *அரக்கோணம்-எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. *அரக்கோணம்-கடற்கரை இடையே அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணம்: * பட்டாபிரம் மிலிட்டரி சைடிங் - எம்.ஜி.ஆர்.சென்டிரல் இடையே இரவு 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், ஆவடி மற்றும் எம்.ஜி.ஆர்.சென்டிரல் இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. * அரக்கோணம் - எம்.ஜி.ஆர்.சென்டிரல் இடையே இரவு 9.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், ஆவடி மற்றும் எம்.ஜி.ஆர்.சென்டிரல் இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. * திருத்தணி - எம்.ஜி.ஆர்.சென்டிரல் இடையே இரவு 9.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், ஆவடி மற்றும் எம்.ஜி.ஆர்.சென்டிரல் இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.


மேலும் திருத்தணி : * எம்.ஜி.ஆர்.சென்டிரல் - திருத்தணி இடையே அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், எம்.ஜி.ஆர்.சென்டிரல் மற்றும் ஆவடி இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. * எம்.ஜி.ஆர்.சென்டிரல் - திருவள்ளூர் இடையே காலை 5 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், எம்.ஜி.ஆர். சென்டிரல் மற்றும் ஆவடி இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. * கடற்கரை - திருவள்ளூர் இடையே காலை 5.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், சென்னை கடற்கரை மற்றும் ஆவடி இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. * எம்.ஜி.ஆர்.சென்டிரல் - திருவள்ளூர் இடையே காலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், எம்.ஜி.ஆர்.சென்டிரல் மற்றும் அரக்கோணம் இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|