தஞ்சை மாவட்டத்திற்கு இந்த உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
By: vaithegi Wed, 11 Oct 2023 3:55:06 PM
தஞ்சை :மன்னன் வரும் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை ... ராஜ ராஜ சோழனின் 1038 வது சதய விழா வருகிற அக்டோபர் 24ஆம் தேதி தொடங்க உள்ளது. எனவே இதற்காக இன்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கும் நிலையில் சதய நட்சத்திர நாளான 25ஆம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
எனவே இந்த விழாவையொட்டி பட்டிமன்றம், நாட்டியம் ,நாடகம் ,திருமுறை அரங்கம் ,கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும் அத்துடன் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் ராஜராஜ சோழ மன்னரின் 1038வது சதய விழாவை ஒட்டி தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.