Advertisement

இந்த மாநிலத்தில் பள்ளி நேரம் மாற்றம் காரணம் இது தான்

By: vaithegi Tue, 20 Dec 2022 6:25:38 PM

இந்த மாநிலத்தில் பள்ளி நேரம் மாற்றம் காரணம் இது தான்

பஞ்சாப் : அனைத்து பள்ளிகளும் காலை 10 மணிக்கு செயல்பட வேண்டும் ..... மாநிலத்தில் அடர் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல், சாலைகள் சரிவர தெரியாமை உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரத்தை மாற்றி பஞ்சாப் மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் காலை நேரத்தில் அடர்ந்த மூடு பனிமூட்டம் தற்போது நிலவி கொண்டு வருகிறது. இதனால் சாலைகள் தெளிவாக இல்லாததால் வாகனங்களின் வேகம் குறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு நலன் கருதி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவர்கள் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

time,school ,நேரம் ,பள்ளி

இதனை அடுத்து இது தொடர்பான ட்விட்டர் பதிவில் முதல்வர் கூறியிருப்பதாவது, மாநிலம் முழுவதும் தற்போது அடர் பனிப்பொழிவு காரணமாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் காலை 10 மணிக்கு செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த நடைமுறை நாளை முதல் (டிச.21) 2023 ஜனவரி 21ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.

Tags :
|