Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாதியை ஒழிக்க இது தான் சரியான வழி ..உயர்நீதிமன்றம் அதிரடி..

சாதியை ஒழிக்க இது தான் சரியான வழி ..உயர்நீதிமன்றம் அதிரடி..

By: Monisha Thu, 14 July 2022 7:54:53 PM

சாதியை ஒழிக்க இது தான் சரியான வழி ..உயர்நீதிமன்றம் அதிரடி..

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், தொட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார், அதில், "எங்கள் கிராமத்தில் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொட்டியம்பட்டி கிராம பஞ்சாயத்தில் ஏற்கனவே மயானம் உள்ளது. இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என தனி தனியாக மயானம் உள்ளது.

இந்த நிலையில் பொன்னமராவதி டவுன் பஞ்சாயத்துக்காக எரிவாயு தகனம் மையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.பொன்னமராவதி டவுன் பஞ்சாயத்தில் ஏற்கனவே உள்ள மயானங்களில் போதிய இடம் இருந்தும், எங்கள் கிராம பஞ்சாயத்துக்குள் எரிவாயு தகனம் மையம் அமைக்க முடிவு செய்துள்ளனர்.

இது சரியான முடிவு அல்ல. எனவே, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி கிராமத்தில் எரிவாயு தகன மையம் அமைக்க தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

case,caste,high court,action ,சாதி,உயர்நீதிமன்றம்,இந்து,குடும்பம்,

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது நீதிபதிகள், இது போன்ற நவீன தொழில்நுட்பத்தால் எரிவாயு தகன மேடை அமைக்கப்படும் போது ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு மயானம் என்ற பாகுபாடு காணாமல் போய்விடும்.

இது போன்ற பாகுபாடுகளை நீக்க நவீன தொழில்நுட்பம் பயண்படுகிறது. ஒருவர் இறந்த பிறகாவது ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் இருந்தால் நல்லது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags :
|
|