Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம் இதற்காக தான்

தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம் இதற்காக தான்

By: vaithegi Thu, 01 Dec 2022 09:52:32 AM

தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம் இதற்காக தான்

மதுரை: ரெயில் போக்குவரத்தில் மாற்றம் ..... மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட தென்மாவட்டங்களில் உள்ள ரெயில் தண்டவாள பகுதிகளில் பல பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே அதன்படி, மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு செங்கோட்டை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06663) மற்றும் செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு மதுரை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06664) ஆகியன வருகிற 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

rail,change ,ரெயில் ,மாற்றம்

இதனை அடுத்து மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16868) வருகிற 5-ந் தேதி முதல் வருகிற 10-ந் தேதி வரையும், வருகிற 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையிலும் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். ராமேசுவரம் - மதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06654) இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேசுவரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.

அதேபோன்று மதுரை-கச்சக்குடா (செகந்திராபாத்) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 7-ந் தேதி மதுரையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு பதிலாக அதிகாலை 6.30 மணிக்கு புறப்படும் என மதுரை ரெயில்வே கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|