வருகிற அக்.13 ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கம் இதற்கா தான்
By: vaithegi Tue, 10 Oct 2023 12:41:13 PM
சென்னை: வருகிற அக். 13 ஆம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் .. தமிழக அரசு சார்பில் அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில் மக்கள் பலர் வெளி ஊர்களுக்கு அதிகம் பயணம் செய்வார்கள்.
அதனால் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் ஏற்கனவே இயங்கி வரும் பேருந்துகளை விட கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க அறிவிப்பு வெளியிடும். அந்த வகையில் வருகிற அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி மகாளய அம்மாவாசை தினம் ஆகும்.
அதனால் பெருபான்மையான மக்கள் ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அதன் படி வருகிற அக். 13 ஆம் தேதி சென்னை, சேலம், கோவை, பெங்களூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.