Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவக்கம் .. இதற்காக தான்

அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவக்கம் .. இதற்காக தான்

By: vaithegi Tue, 13 Dec 2022 7:03:42 PM

அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  ..  இதற்காக தான்

சென்னை: முன்பதிவு இன்று முதல் துவக்கம் ... தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். முதல் நாள் தைப்பொங்கல், அடுத்த நாள் மாட்டுப் பொங்கல், 3-ம் நாள் காணும் பொங்கல் என 3 நாட்கள் பொங்கல் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் கலைக்கட்டும்.

இதனை அடுத்து இப்பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவர். மேலும் பண்டிகைக்கு முதல் நாளே அரசு பேருந்துகளில் பயணம் செய்ய தொடங்குவர்.

ticket,govt express bus ,டிக்கெட் ,அரசு விரைவு பேருந்து

அனைவரும் ஒரே நாளில் பயணம் செய்யும் போது பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை பயணிகளுக்கு அளித்துள்ளது.

எனவே அதன்படி 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது. தற்போது வரை குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பொங்கல் நெருங்கும் நிலையில் விடுமுறையை பொறுத்து பயணிகளின் எண்ணிக்கை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|