Advertisement

பராமரிப்பு பணி ... இந்த ரயில் சேவை தற்காலிகமாக ரத்து

By: vaithegi Tue, 10 Jan 2023 4:41:31 PM

பராமரிப்பு பணி  ... இந்த  ரயில் சேவை தற்காலிகமாக ரத்து

சென்னை: வாராந்திர விரைவு ரயில் பகுதியாக ரத்து ...... இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ரயில் சேவையை நாடுகின்றனர். இந்நேரத்தில் மக்களுக்கு இடையூறு இன்றி சிறந்த முறையில் சேவையை வழங்கும் நோக்கில் ரயில்வே துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து தற்போது தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இந்நிலையில் ரயில்கள் மற்றும் அவை செல்லும் பாதைகளில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

maintenance work,train service ,பராமரிப்பு பணி  ,ரயில் சேவை

அந்த வகையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் கோவை – வாஞ்சிபாளையம் சோமனூர் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. எனவே அதன் காரணமாக ரயில்கள் செல்லும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தற்போது பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபடவுள்ளது. அதனால் ராமேஸ்வரம் – மண்டபம் வழியாக செல்லும் வாராந்திர விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை கிடையாது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags :