நாளை முதல் டிசம்பர் 23ம் தேதி வரை இந்த ரயில் சேவை நிறுத்தம்
By: vaithegi Tue, 15 Nov 2022 2:38:47 PM
சென்னை: ரயில் சேவை நிறுத்தம் .... இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கும் நிலையில் அவர்களுக்கு சிறப்பான சேவை அளிக்கும் பொருட்டு அவ்வப்போது ரயில் மற்றும் ரயில் வழித்தடங்களில் சில பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பணிகளின் போது அந்த பகுதி ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில் பொறியியல் மேம்பாட்டு பணிகள் காரணமாக ஆலப்புழா- தன்பாத் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன் படி நாள்தோறும் காலை 6 மணிக்கு கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் இருந்து புறப்படும் ஆலப்புழா- தன்பாத் விரைவு ரயில் 3ம் நாள் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் சென்றடையும். இந்த ரயிலானது கோவை மற்றும் திருப்பூர் வழியாக செல்லும். கோவைக்கு மதியம் 12.20 மணிக்கும் திருப்பூருக்கு மதியம் 1.10க்கும் வந்து சேரும்.
இதையடுத்து இந்நிலையில் போத்தனூர் – கோவை இடையே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் ஆலப்புழா- தன்பாத் விரைவு ரயில் அடுத்த 23 நாட்களுக்கு அதாவது நாளை முதல் டிசம்பர் 23ம் தேதி வரை கோவை ரயில் நிலையத்திற்கு வராது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.