Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லண்டனில் இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் தெரிந்தது

லண்டனில் இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் தெரிந்தது

By: Nagaraj Thu, 15 June 2023 11:10:15 PM

லண்டனில் இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் தெரிந்தது

புதுடில்லி: லண்டனில் இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் கண்டிருப்பதாக என்ஐஏ அறிவித்துள்ளது.

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் தாக்குதல் நடத்தி, இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் கண்டிருப்பதாக தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

indian embassy,​​attack,national flag,insult,officials ,இந்திய தூதரகம், தாக்குதல், தேசியக்கொடி, அவமதிப்பு, அதிகாரிகள்

இதுதொடர்பாக வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய 45 பேரின் புகைப்படங்கள் லண்டனில் உள்ள அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களைப் பற்றிய தகவல்களைத் தருமாறு இந்தியா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல், தேசியக் கொடி அவமதிப்பு தொடர்பான 2 மணி நேர வீடியோ காட்சியையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Tags :
|