Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு ...விண்ணப்பித்தவர்கள் திருத்தம் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை செய்யலாம்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு ...விண்ணப்பித்தவர்கள் திருத்தம் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை செய்யலாம்

By: vaithegi Mon, 25 July 2022 1:40:06 PM

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு  ...விண்ணப்பித்தவர்கள் திருத்தம்  24ம் தேதி முதல் 27ம் தேதி வரை செய்யலாம்

சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டும் நடக்க உள்ளது. மேலும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II 2022 ஆம் ஆண்டுக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வாயிலாக 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது.

மேலும் விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் 26.04.2022 வரை வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு 2,30,878 பேரும், தாள் II க்கு 4,01,886 என மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 ,ஆசிரியர் தகுதித் தேர்வு ,திருத்தம்

இதை அடுத்து விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதனால், விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்று மேற்கண்ட இரண்டு தாள் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, திருத்தங்கள் செய்ய விரும்புவோர் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தின் மூலம் திருத்தங்களை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருத்தங்கள் செய்த பிறகு சமர்ப்பிக்கும் பொத்தானை அழுத்தி உறுதி செய்யாவிட்டால் முந்தைய விவரங்களே ஏற்று பரிசீலிக்கப்படும். இதையடுத்து விண்ணப்பத்தை சமர்ப்பித்து பணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே மாற்றங்களை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

Tags :