Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் விரைவில் செலுத்த ...பொதுமக்களுக்கு வேண்டுகோள்

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் விரைவில் செலுத்த ...பொதுமக்களுக்கு வேண்டுகோள்

By: vaithegi Mon, 11 July 2022 12:26:46 PM

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள்  விரைவில் செலுத்த ...பொதுமக்களுக்கு  வேண்டுகோள்

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்திலும் ஒரு நாள் பாதிப்பு 3000யை நெருங்கி இருக்கிறது. அதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் அரசு கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது என மக்கள் சாதாரணமாக இருக்க கூடாது என அவ்வப்போது அரசு எச்சரித்துக் கொண்து தான் இருக்கிறது. மேலும் கொரோனா பரவலை குறைக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஒரே வழி என்பதால் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

vaccination,corona ,தடுப்பூசி ,கொரோனா

அதனால் நேற்று தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்நிலையில் அது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் கோவிட் தாக்கம் இன்னும் அகலவில்லை என்பதை உணர்ந்து நம்மை பாதுக்காக்கும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நேற்று நடந்த கோவிட் மெகா தடுப்பூசி முகாம்களில் 17,55,364 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதனால் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் விரைவில் செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :