இலங்கைக்கான கடன் உதவியை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள்
By: Nagaraj Fri, 24 Mar 2023 8:19:15 PM
கொழும்பு: நாட்டின் எதிரிகள்... சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) வின் இலங்கைக்கான கடன் உதவியை யாரும் எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் நாட்டின் எதிரிகள் என எதிர்க்கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை மீதான 2ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ.எம்.எஃப்.இன் நிபந்தனை மிகவும் கடினமானது குறிப்பாக 2026ஆம் ஆண்டாகும் போது எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 15.3 வரை அதிகரிக்க வேண்டும்.
அப்படியானால் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டி ஏற்படுகிறது. அதற்காக அரசாங்கம் கட்டண அதிகரிப்புகளுக்கு செல்லவேண்டி ஏற்படும் என அவர் மேலும் கூறினார்.