Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளை தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளை தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு

By: Karunakaran Sat, 12 Dec 2020 11:43:02 AM

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளை தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியிலும், டெல்லி எல்லைப்புற சாலைகளிலும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் போராட்டம் 17-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதுவரை எந்த சுமூக முடியும் எட்டப்படவில்லை. இந்நிலையில், விவசாய சங்கங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேசமயம் போராட்டத்தையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

police mobilize,farmers,delhi,protesting ,போலீசார் அணிதிரண்டு, விவசாயிகள், டெல்லி, எதிர்ப்பு

இன்று டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை தடுத்து மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்காக டெல்லி நோக்கி ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களில் அணி அணியாக சென்றவண்ணம் உள்ளனர். இதனால் மேலும் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குர்கானில் 2000 போலீசாரும், பரிதாபாத்தில் 3500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags :
|