Advertisement

சீன ராணுவம் சுட்டு இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம்

By: Nagaraj Tue, 16 June 2020 2:43:23 PM

சீன ராணுவம் சுட்டு இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம்

லடாக் எல்லையில் பதற்றம்... லடாக்கில் சீன ராணுவத்தினருடனான மோதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் பலியான சம்பவத்தால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மத்தய

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இருநாட்டு படைகளையும் திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது, திடீர் மோதல் வெடித்தது. இந்த மோதலில், இந்திய தரப்பில் ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 3 ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர்.

china,army,indian soldiers,3 killed ,சீனா, ராணுவம், இந்திய வீரர்கள், 3பேர் பலி

சம்பவ பகுதியில் பதற்றம் நிலவுவதால், இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள இந்திய ராணுவத்தினர், இருநாட்டு ராணுவ வீரர்களுடனான மோதலின்போது, துப்பாக்கிச்சூடு எதுவும் நடைபெறவில்லை என்றும், கல்எறிதல் மற்றும் கைகலப்பு மட்டுமே நடந்ததாக தெரிவித்துள்ளனர்.

1975 ஆம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையேயான மோதலில் உயிர்பலி ஏற்பட்டது நினைவுக்கூரத்தக்கது. இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனா தரப்பிலும் சில வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தங்கள் தரப்பு சேத விபரத்தைத சீனா வெளியிடவில்லை. இதற்கிடையில் தங்கள் எல்லைக்குள் இந்தியா தான் ஊடுருவியதாக சீனா குற்றம்சாட்டியது. தன்னிச்சையாக எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

Tags :
|
|