Advertisement

புதுக்கோட்டையில் மேலும் மூன்று பேருக்கு டெங்கு உறுதி

By: vaithegi Thu, 12 Oct 2023 10:12:57 AM

புதுக்கோட்டையில் மேலும் மூன்று பேருக்கு டெங்கு உறுதி

புதுக்கோட்டை: டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எனப்படும் கொசுவினால் பரவுகிறது. இதையடுத்து சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.

காதாரத் துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கொண்டு வருகிறது.

dengue,pudukottai ,டெங்கு ,புதுக்கோட்டை

இதனை அடுத்து செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து தற்போது வரை 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு விட நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்து உள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 34 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 93 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 137 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

Tags :
|