Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

By: Karunakaran Mon, 29 June 2020 10:03:07 AM

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி எல்லைமீறி தாக்குதல் நடத்தும் . இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்கும். மேலும் ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நுழைவதற்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்கிறது. இதனால் ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து அவர்களது முகாம்களை அழித்து வருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று காலை என்கவுண்டர் நடத்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

jammu and kashmir,terrorist,security guards,pakistan ,ஜம்மு-காஷ்மீர், பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குல்சோகர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதன்பின் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தில் 2000க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :