Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

By: Nagaraj Mon, 22 June 2020 5:54:50 PM

தமிழகத்தில் 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு... தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அம்மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நெல்லை தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

rain,chance,heat exhaustion,weather center,walpora ,மழை, வாய்ப்பு, வெப்ப சலனம், வானிலை மையம், வால்பாறை

அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை, சோலையார் பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags :
|
|