இன்று 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
By: vaithegi Tue, 02 May 2023 11:23:17 AM
சென்னை: தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவதால், கடந்த சில நாட்களாகஏ தமிழகத்தில் கோடை மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் வெய்லின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் ஒன்று நிலவுகிறது.
இதற்கு இடையே நேற்று சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனிடையே தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதையடுத்து அதன்படி, அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், செங்கல்பட்டு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இடி மின்னலுடம் மழை மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.