Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

தென் இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

By: vaithegi Mon, 19 June 2023 12:15:02 PM

தென் இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. பல நாட்கள் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்த பின்னரும் கூட வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து அதற்கேற்ப பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி கொண்டு வருகிறது.

rain and weather centre ,மழை ,வானிலை மையம்


எனவே அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியிருந்தது.

இதனை அடுத்து தென் இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய பரவலாக லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று ஜூன் 19 ஆம் தேதி தமிழ்நாடு, கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மேலும், அடுத்த 5 நாட்களுக்குத் தமிழ்நாட்டில் மிதமான மழை தொடரும் என்றும் கூறி உள்ளது.

Tags :