Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் சில பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சில பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Mon, 14 Nov 2022 8:08:33 PM

தமிழகத்தில் சில பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை: இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் .... தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 1 முதல் 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

rainy,chennai ,மழை,சென்னை

அதேபோன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மிதமான இடியுடன் கூடிய மழை அல்லது மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஓரிரு மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|