Advertisement

வெப்பச்சலனத்தால் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

By: Nagaraj Tue, 26 May 2020 3:00:35 PM

வெப்பச்சலனத்தால் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

weather,observatory,convection,anal wind,rain ,வானிலை, ஆய்வு மையம், வெப்பச்சலனம், அனல் காற்று, மழை பெய்யும்

விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம். மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து அனல்காற்று வீசக்கூடும்.

இதனால், அடுத்த 2 நாட்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பகல் 11:30 முதல் 3:30 வரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :