Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் டிக்-டாக் மற்றும் வி-சாட் செயலிகளுக்கு வரும் ஞாயிறு முதல் தடை

அமெரிக்காவில் டிக்-டாக் மற்றும் வி-சாட் செயலிகளுக்கு வரும் ஞாயிறு முதல் தடை

By: Karunakaran Sat, 19 Sept 2020 09:31:37 AM

அமெரிக்காவில் டிக்-டாக் மற்றும் வி-சாட் செயலிகளுக்கு வரும் ஞாயிறு முதல் தடை

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்குப்பின், அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. சமீபத்தில் இதுகுறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

டிக் டாக் செயலி மூலம் சீனா உளவு பார்க்க முயற்சிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகிறது. ஏற்கனவே, அமெரிக்கா-சீனா இடையே மோதல் வலுத்து வந்த நிலையில், டிக் டாக் செயலி குறித்த விவகாரம் பெரும் மோதலை அதிகரித்தது. இருப்பினும், தங்கள் நிறுவன செயல்பாடுகளில் சீன அரசின் பங்கு எதுவும் இல்லை என அந்நிறுவனம் தொடர்ந்து கூறிவருகிறது.

tik tok,v-chat processors,banned,united states ,டிக் -டாக், வி-சேட் செயலிகள், தடை, அமெரிக்கா

தற்போது, சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமுடைய வீடியோக்களை பகிரும் செயலியான டிக்டாக் மற்றும் செய்திகளுக்கான செயலியான வீ சாட் ஆகியவற்றை மக்கள் பதிவிறக்கம் செய்வதற்கு வரும் 20-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. இந்த இரு செயலிகளும் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் நெருக்கடி காரணமாக, டிக் டாக்கின் அமெரிக்க செயல்பாட்டு பிரிவை ஆரக்கிள் நிறுவனத்திடம் அந்நிறுவனம் வழங்கவிருந்த நிலையில் அதிர்ச்சிகரமான இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீன செயலிகள் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தானவை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|