Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உளவு பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு டிக்டாக் சிஇஓ மறுப்பு

உளவு பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு டிக்டாக் சிஇஓ மறுப்பு

By: Nagaraj Sun, 26 Mar 2023 6:25:50 PM

உளவு பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு டிக்டாக் சிஇஓ மறுப்பு

வாஷிங்டன்: டிக்டாக் சிஇஓ மறுப்பு... அமெரிக்கர்களை உளவு பார்த்ததாகவும், சீன அரசுக்கு தகவல் அளிப்பதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டை டிக் டாக் சிஇஓ சவ் சி சூவ் மறுத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக டிக் டாக் அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், டிக் டாக் நிறுவனம் அமெரிக்க மக்களை உளவு பார்ப்பதாகவும், அமெரிக்க நாடு குறித்த ரகசிய தகவல்களை சீன அரசுக்கு வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமெரிக்க அரசு ஊழியர்கள் டிக் டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்கா முழுவதும் டிக் டாக்கை தடை செய்ய வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இதில், டிக் டாக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளிக்க, அதன் தலைமை நிர்வாக அதிகாரி சவ் சி சூவ் நாடாளுமன்றக் குழு முன் ஆஜரானார்.

american,spy,tik tok , உளவு, டிக்டாக், தலைமை நிர்வாக அதிகாரி

அங்கு பேசிய அவர், “எங்கள் நிறுவனம் சீனாவுக்கோ அல்லது பிற நாடுகளுக்கோ வேலை செய்யவில்லை என்பதில் உறுதியாக உள்ளேன். 150 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் எங்கள் தளத்தை விரும்புகிறார்கள். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்,” என்றார்.

மேலும், கலிபோர்னியாவைச் சேர்ந்த எம்.பி. டிக் டாக் ஒரு சீன நிறுவனமா என்று ஒருவர் கேள்வி எழுப்பினார், அதற்கு அவர் பதிலளித்தார், “டிக் டாக் என்பது சிங்கப்பூர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய நிறுவனம். டிக் டாக் உளவு பார்க்கிறது என்ற கருத்து முற்றிலும் கற்பனையானது” என்று அவர் பதிலளித்தார்.

டிக் டாக் தலைமை நிர்வாக அதிகாரி சவ் சி சூவ் சுமார் ஐந்து மணி நேரம் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிற்கு பதிலளித்துள்ளார்.

Tags :
|