குளியல் தொட்டியில் உற்சாக ஆட்டம் போட்ட திருச்செந்தூர் கோயில் யானை
By: Nagaraj Wed, 07 June 2023 7:17:21 PM
திருச்செந்தூர்: கோடை வெப்பத்தை தணிக்க குளியல் தொட்டியில் உற்சாகமாக ஓடிப் பிடித்து விளையாடி மகிழ்ந்துள்ளது திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை குளியல் தொட்டியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தது.
கோடை வெப்பத்தை சமாளிக்க ஏதுவாக, திருச்செந்தூர் கோவில் யானைக்காக சரவண பொய்கையில் 35 லட்சம் ரூபாய் செலவில் குளியல் தொட்டி கட்டப்பட்டது.
தினமும் காலை யானை அங்கு அழைத்து வரப்பட்டு நீராட வைக்கப்படுகிறது. இன்றும் குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்ட தெய்வானை, ஷவரில் குளித்து மகிழ்ந்ததோடு, தண்ணீரில் பாகன்களுடன் உற்சாகமாக விளையாடியது. யானை உற்சாக குளியல் இடுவதை ஏராளமான பக்தர்கள் பார்த்துச் சென்றனர்.
Tags :
pagans |