Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்

By: vaithegi Thu, 10 Aug 2023 09:32:56 AM

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்

சென்னை: குரூப் 1 முதன்மை தேர்வுகள் இன்று தொடங்குகிறது..தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1, குரூப் 2, 2 ஏ, குரூப் 4 என்று படிநிலை வாரியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்ச்சி பெறுபவர்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதையடுத்து அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

mains exams,tnpsc,mains exam ,முதன்மைத் தேர்வுகள்,டிஎன்பிஎஸ்சி ,முதல்நிலைத் தேர்வு

இதனை அடுத்து இதில் குரூப் 1 தேர்வுகள் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்க்காணல் அடிப்படையில் தேர்வுப்பணிகள் நடைபெறும். அந்தவகையில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

அதை தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி வருகிற 13-ந்தேதி வரை நடைபெறவுள்ள இத்தேர்வில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் பங்கேற்கின்றனர்.

Tags :
|