Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சின்னம் பெற ரூ. 2 ஆயிரம் கோடி வரை பேரம்... உத்தவ் அணி எம்.பி., பரபரப்பு குற்றச்சாட்டு

சின்னம் பெற ரூ. 2 ஆயிரம் கோடி வரை பேரம்... உத்தவ் அணி எம்.பி., பரபரப்பு குற்றச்சாட்டு

By: Nagaraj Mon, 20 Feb 2023 10:11:54 AM

சின்னம் பெற ரூ. 2 ஆயிரம் கோடி வரை பேரம்... உத்தவ் அணி எம்.பி., பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: உத்தவ் அணி எம்.பி., பரபரப்பு புகார்... சிவசேனாவுக்கு கட்சி மற்றும் சின்னம் ரூ. 2,000 கோடி வரை பேரம் நடந்துள்ளதாக உத்தவ் அணியை ஆதரிக்கும் எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினர் உண்மையான சிவசேனாவையும் அம்பு சின்னத்தையும் பயன்படுத்த தகுதியுடையவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான முன்னாள் அணி ஏற்கவில்லை.

mumbai,shiv sena,uddhav-thackeray, ,உத்தவ் தாக்கரே, சிவசேனா, மும்பை

உத்தவ் அணியின் ஆதரவாளரான எம்பி சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள பதிவில், அம்பு சின்னத்தை பெற ரூ.2,000 கோடி பரிவர்த்தனை நடந்துள்ளது. ரூ.2,000 கோடி உண்மையான தகவல்; இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது; விரைவில் வெளியிடுகிறேன்.

ஆளும் ஆட்சிக்கு நெருக்கமான ஒரு பில்டர் இந்த தகவலை என்னிடம் தெரிவித்தார். எம்எல்ஏவுக்கு ரூ.50 கோடி, எம்பிக்கு ரூ.100 கோடி, கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு ₹1 கோடி வரை பேரம் பேசுகிறார்கள். அப்படியானால், சிவசேனா கட்சியின் சின்னத்தையும் கட்சியின் பெயரையும் வாங்கினால் எவ்வளவு பணம் கொடுக்க முடியும் என்பதை யூகிக்க முடியும்.

Tags :
|