எட்டு நாட்களுக்கு பின் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்
By: Nagaraj Sat, 30 July 2022 3:35:50 PM
ராமேஸ்வரம்: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 நாட்களுக்குப் பின் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
கடந்த ஜூலை 20 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஜூலை 26 ஆம் தேதி, தமிழக மீனவர்களையும் மீன்பிடிப் படகுகளையும்
விடுவிக்கக்கோரி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், வாழ்வாதாரம் கருதி மீனவர்கள்
தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். 8 நாட்களுக்குப் பின் இன்று
ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
Tags :
struggle |