Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று மற்றும் நாளை மெட்ரோ ரயில் இரவு 1 மணி வரைக்கும் இயங்கும்

இன்று மற்றும் நாளை மெட்ரோ ரயில் இரவு 1 மணி வரைக்கும் இயங்கும்

By: vaithegi Tue, 23 May 2023 2:08:01 PM

இன்று மற்றும் நாளை மெட்ரோ ரயில் இரவு 1 மணி வரைக்கும் இயங்கும்

சென்னை: சென்னையில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களும் ஐபிஎல் பிளே ஆப் நடைபெற இருப்பதால் இரண்டு நாட்களுக்கும் மெட்ரோ ரயில் இரவு 1 மணி வரைக்கும் இயங்கும் என மெட்ரோ நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு ...

சென்னையில் இன்று மற்றும் நாளை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே, சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை காண ஆயிரங்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஸ்டேடியத்தில் குவிந்தனர்.

அதே போன்று இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளை கண்டு களிப்பதற்காக லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் பல ஊர்களில் இருந்தும் வர இருக்கிறார்கள். எனவே, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

metro rail,chennai , மெட்ரோ ரயில் ,சென்னை

அதாவது, இன்று மெட்ரோ ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதும் என்பதனால் பயணிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் மெட்ரோ ரயில் பயண சீட்டுகளை whatsapp மூலமாகவே கியூ ஆர் கோடு அல்லது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலின் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், வழக்கமாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்கள் இரவு 11 மணிக்கு மூடப்படும். ஆனால், இன்று சென்னையில் பிளே ஆப் நடைபெற இருப்பதால் கிரிக்கெட் பார்க்க வரும் ரசிகர்களுக்காக இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களும் இரவு 1 மணி வரைக்கும் மெட்ரோ டிக்கெட் கவுண்டர்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :