இன்று இலங்கையில் மேலும் 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
By: Nagaraj Sun, 13 Dec 2020 8:39:49 PM
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 515 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்த 147 பேரும், பேலியகொடை கொரோனா கொத்தணியை சேர்ந்த 368 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 32
ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா பாதித்த மேலும் 489
பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் இதுவரை 23
ஆயிரத்து 793 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாகக் குணமடைந்து
வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 8 ஆயிரத்து 193 பேர் தொடர்ந்தும்
வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 149 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.