Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று இத்தனை பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று இத்தனை பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

By: vaithegi Sat, 12 Nov 2022 9:07:07 PM

தமிழகத்தில் இன்று இத்தனை பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

சென்னை: 80 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி ..... தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாவே தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ள நிலையில், இன்றும் தொற்று பாதிப்பு 80 ஆக குறைந்துள்ளது.

தன்னை அடுத்து தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 40 ஆண்கள், 40 பெண்கள் உள்பட மொத்தம் 80 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona,chennai ,கொரோனா ,சென்னை

இதில் அதிகபட்சமாக சென்னையில் 16 பேர் உள்பட 27 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கடலூர், தர்மபுரி, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. மருத்துவமனையில் 196 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 750 பேர் சிகிச்சையில் உள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|