Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல்

இன்று தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல்

By: vaithegi Wed, 19 Oct 2022 5:28:33 PM

இன்று  தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் .... ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் கோரிக்கைகள் எழுந்தது. இதனை அடுத்து அப்போது சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதற்கான அறிவுரைகள் வழங்க அரசு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

மேலும் அதுமட்டுமல்லாமல் மக்களிடம் இணையதள விளையாட்டுகள் குறித்து மின்னஞ்சல் வாயிலாகவும் கருத்துகள் பெறப்பட்டது. எனவே இதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

online gambling,legislature , ஆன்லைன் சூதாட்டம், சட்டப்பேரவை

இதையடுத்து இச்சட்டத்திற்கு தமிழக ஆளுநர் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதனை தொடர்ந்து தமிழக அரசு கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தது.

மேலும் ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அதற்கான சட்டம் இயற்ற வேண்டும் எனவே அதன்படி இன்று (அக்.19) தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

Tags :