Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை

By: vaithegi Mon, 10 Oct 2022 2:42:57 PM

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை ..... தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காமல் இருக்கிறது.

இருந்தாலும் தென் மேற்கு வங்கக் கடலில், இலங்கையை ஒட்டிய பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டு வருகிறது.

மேலும் கனமழை வருகிற அக். 13 ஆம் தேதி வரை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

holiday,heavy rain,pudukottai ,விடுமுறை,கனமழை ,புதுக்கோட்டை

மேலும் காலாண்டு தேர்வுகள் முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், கனமழை காரணமாக புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (10.10.2022) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :