சிவகங்கையில் உள்ள 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
By: vaithegi Fri, 27 Oct 2023 10:30:50 AM
சிவகங்கை: மருது பாண்டியர்கள் நினைவு தினம் .... சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் எனப்படும் பெரிய மருது, சின்ன மருது ஆகியோரை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்க்கொடி ஏந்திய வீரர்களுள் முக்கியமானவர்கள் மருது பாண்டிய சகோதரர்கள். சிவகங்கை சீமையை ஆண்டவர்களும் சுதந்திர போராட்ட வீரர்களுமான மருது சகோதரர்களை, கடந்த 1801 ஆண்டு ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். அந்நாள் ஆண்டுதோறும் மருது சகோதரர்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மருதுபாண்டியர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர், தேவகோட்டை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டு உள்ளார்.