வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
By: vaithegi Thu, 14 July 2022 08:05:00 AM
வால்பாறை: வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்து பெய்து கொண்டு வருகிறது. இந்த தொடர் மழையால் நடுமலை, வெள்ளிமலை டனல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனை அடுத்து பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் அடிப்படை அணையாக விளங்கும் சோலையாறு அணை நிரம்பியது. அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு வினாடி உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.
அதனால் சோலையாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு, உபரி நீர் கேரளாவிற்கு ஒரு மணி நேரத்திற்கு 1,000 கன அடி விதம் வெளியேற்றப்பட்டு கொண்டு வருகிறது.
இந்நிலையில், வால்பாறை பகுதி முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், கோவை மாவட்ட கலெக்டர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.