Advertisement

இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

By: vaithegi Wed, 31 May 2023 1:15:08 PM

இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

கரூர் : உலகப் புகழ்பெற்ற கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் ஒவ்வொருவாண்டும் வைகாசி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கிட்டத்தட்ட 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு பல ஊர்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.

இதையடுத்து ஏராளமானோர் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு செல்வர். அந்த வகையில் இந்தாண்டு அருள்மிகு மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த மே 14ஆம் தேதி முதல் தொடங்கி வருகிற ஜூன் 11ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

local holiday,karur ,உள்ளூர் விடுமுறை,கரூர்

எனவே அதன்படி, இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. மேலும், அமராவதியை ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியை காண பல்வேறு ஊர்களிலிருந்தும் திரளான பக்தர்கள் வந்துள்ளனர்.

எனவே இதனையொட்டி இன்று மட்டும் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என்று கருர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள் அறிவித்திருக்கிறார். மேலும், இந்த விடுமுறையை ஈடு கட்டும் விதமாக வரும் ஜூன் 3-ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..

Tags :