Advertisement

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Thu, 08 Dec 2022 10:14:39 AM

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

திருவாரூர் : பள்ளிகளுக்கு விடுமுறை .... புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழையின் முன்னெச்சரிக்கையால் திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு உள்ளார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்

இதனை அடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு உள்ளார் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

vacation,school,college ,விடுமுறை ,பள்ளி, கல்லூரி

இதை தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக இன்று புயலாக வலுப்பெறக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து இந்த கனமழையின் முன்னெச்சரிக்கையினால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
|