இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
By: vaithegi Tue, 13 Dec 2022 07:48:06 AM
சென்னை: வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் , நாளையும் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வருகிற 16 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.