இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்; ஆளுநர், முதல்வர் வாழ்த்து
By: Nagaraj Sat, 01 Aug 2020 10:55:54 AM
இன்று பக்ரீத் பண்டிகையை ஒட்டி இஸ்லாமிய மக்களுக்கு தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
இறைவனின் கட்டளைக்கு மனிதன் கீழ்ப்படிவதன் அடையாளமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்புனித நாளில் தாராளம், சகிப்புத்தன்மை, இரக்கம் ஆகிய நற்பண்புகளை நிலைநிறுத்த அனைவரும் உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளதாவது: இந்த தியாகத் திருநாளில் திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை மக்கள்அனைவரும் மனதில் நிறுத்திஅன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது வாழ்த்துச்செய்தியில், பக்ரீத் எனும்
தியாகத் திருநாளில், அன்புக்குரிய இஸ்லாமிய சகோதார சகோதரிகளுக்கு
மனம்கனிந்த பக்ரீத் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
கே.எஸ்.அழகிரி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக
பொதுச் செயலாளர் வைகோ,
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.