Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் இணைப்பு எண், ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே இறுதி நாள்

மின் இணைப்பு எண், ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே இறுதி நாள்

By: vaithegi Tue, 28 Feb 2023 09:49:22 AM

மின் இணைப்பு எண், ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே இறுதி நாள்

சென்னை:கால அவகாசம் இன்றுடன் நிறைவு ... தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதையடுத்து இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் மானியம் பெறக்கூடிய மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

கடந்தாண்டு அக்டோபரில் இந்த அறிவிப்பு மின்சார வாரியம் தரப்பில் வெளியிடப்பட்டது. எனவே அதன்படி கடந்தாண்டு நவம்பர் 15-ம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது. ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது.

electricity connection number,aadhaar number ,மின் இணைப்பு எண், ஆதார் எண்

இதன் இடையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31-ஆம் தேதி எனக் கூறப்பட்ட நிலையில், ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. எனவே அதன்படி மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைகிறது. இதற்குமேல் அவகாசம் வழங்கப்படாது என்று மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இன்று மாலைக்குள் மின் - ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் வலியுறுத்திவுள்ளது. https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhmtl என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :