- வீடு›
- செய்திகள்›
- இன்று (அக்.11) திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ... வானிலை ஆய்வு மையம் தகவல்
இன்று (அக்.11) திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ... வானிலை ஆய்வு மையம் தகவல்
By: vaithegi Tue, 11 Oct 2022 5:05:31 PM
சென்னை: 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ... தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதனை தொடர்ந்து நாளை திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, மதுரை, கடலூர், சிவகங்கை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளிலும்
இதையடுத்து அரியலூர், சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.