இன்று ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார்
By: Nagaraj Thu, 01 June 2023 10:49:20 AM
கொழும்பு: நாட்டு மக்களுக்காக உரை... ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது, தற்போதைய பொருளாதார மீட்சி முயற்சிகளுக்கான ஆதரவைப் பெற்று கொள்ளும் விதமாக வெளிநாட்டு மற்றும் பொருளாதார கொள்கைகளை விளக்கியிருந்தார்.
ஜப்பான் பிரதமருடனான கலந்துரையாடலின் போது, இடைநிறுத்தப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
Tags :
informs |