Advertisement

இன்று கனமழை காரணமாக லக்னோவில் பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Fri, 16 Sept 2022 1:35:45 PM

இன்று கனமழை காரணமாக லக்னோவில் பள்ளிகளுக்கு விடுமுறை

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கனமழை காரணமாக, 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து லக்னோ பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட அதிகாரிகள் மூலமாக இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையிலும் வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கான விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும் மாநிலம் முழுவதும் கனமழைக்கான எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

holiday,heavy rain,lucknow ,விடுமுறை,கனமழை , லக்னோ

இதனை அடுத்து உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செய்தி அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட 34 பகுதிகளுக்கு கனமழை காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல பகுதிகளுக்கு மஞ்சள் முதல் ஆரஞ்சு வரையிலான கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையில், அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். பள்ளி மீண்டும் திறப்பு மற்றும் பிற தகவல்களுக்கு, அவர்கள் தங்கள் பள்ளிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :