Advertisement

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றம்

By: vaithegi Mon, 15 May 2023 11:01:56 AM

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றம்

இந்தியா: கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து கொண்டு வருகிறது என்பதும் வாரத்தின் 3 நாட்கள் பங்குச்சந்தை ஏற்றத்திலும் 2 நாட்கள் சரிவிலும் இருந்து கொண்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திவுள்ளது. சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து 62200 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி கொண்டு வருகிறது.

stock market,investor ,பங்குச்சந்தை ,முதலீட்டாளர்

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 50 புள்ளிகள் உயர்ந்து 18,366 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் இந்த வாரம் முழுவதும் பாசிட்டிவாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் எனவும் சரியான முதலீட்டு ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்து அதன் பின்னர் வர்த்தகம் செய்யவும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.


Tags :